Saturday, June 20, 2009

உயிர் ஜோ(தீ)

என்னை கொளுத்திய
தீயில் - ஒரு சுடர்
எடுத்துத்தானே - அவன்
வீட்டில் தீபம்
ஏற்றினாய்?
சரி
கவனமாக பார்த்துக்கொள்
உன் வீட்டில் எரிவது
விளக்கல்ல..
என் காதல்..

Friday, June 19, 2009

ஓவியனே!

தூரிகை பிடிக்கும்
உன்
விரல்களுக்கேனும்
அனுமதி கொடு - நான்
வெள்ளை
காகிதமாய்த்தானிருக்கிறேன்..

மழை

தொடர்ந்து வரும்
மழையை
தொடர்வண்டியில்
இருந்தவாறு
ரசிக்கிறேன்
தொடர்ந்து வருமா என்று.

மண் வாசனை

இதென்ன..!
வானம் தூவிய மொட்டுக்கள்
மண்ணில் வந்ததுதான்
மலர்கின்றதா.?
இல்லை
மழை காதலனை மயக்க
நிலமகள் வாசனையை
அனுப்பி
வரவேற்கிறாளா.?

Tuesday, June 16, 2009

கொஞ்சம் பொறுங்கள்.....

சவ ஊர்வலத்தின்
முடிவிலே
கல்லறைக்கு
வெளியிலே - என்னை
காத்திருக்கச்செய்யுங்கள்
அவள் வந்தவுடன்
எழுந்து பார்த்துவிட்டு
விழுந்து விடுகிறேன்.....